அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் கழுவேத்தி மூர்க்கன் படத்தின் ப்ரிவியூ ஷோவை கண்டு ரசித்த டைரக்டர் மிஷ்கின், பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “கழுவேத்தி மூர்க்கன், கத்தி மேல் நடக்குற மாதிரி ஒரு கதை. நன்றாக எடுத்திருக்காங்க. இப்படத்தை பார்த்து நல்லா என்ஜாய் பண்ணினேன். படத்தின் திரைக்கதையானது மிகவும் சிறப்பாக இருந்தது. படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் எனக்கு பிடித்து இருந்தது. தற்போது தயாரிப்பாளர் தாணு சாருக்கு படம் எடுக்கிறேன்.

விஜய்சேதுபதிக்கு கதை எழுதிக்கிட்டு இருக்கேன். லியோ படத்தில் என்னோட பகுதிகள் முடிந்து விட்டது. மாவீரன் முழு படத்துல வில்லனாக நடித்து இருக்கிறேன். சிவகார்த்திகேயன் கூட பணிபுரிந்ததில் மிகவும் சந்தோஷம். தளபதி விஜய்யை பற்றி சொல்லவே வேண்டாம். 22 வருடத்திற்கு பின் மீட் பண்னேன். செல்லம் என்னை அப்படியே கொஞ்சுச்சு. லியோ திரைப்படமும் பெரிய வெற்றியடையும். அனைத்து படமும் வெற்றியடையணும்” என்று அவர் கூறினார்.