
மேற்கு வங்காளம் ராம்சந்த்பூர் பஞ்சிகிட்டா கிராமத்தில் 21 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இவரது கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இளம்பெண் தன்னுடைய தந்தை ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு தன்னுடைய குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
கடந்த 26 ஆம் தேதி நடந்த கோவில் திருவிழாவின் போது அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது தேசியவாத கட்சியை சேர்ந்த பஜர் அலி என்பவர் அந்த இளம்பெண் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அப்போது அவருடன் இருந்த நபர்கள் சிலர் அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவேற்றம் செய்தனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் பல இடங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்று வருகிறது. போலீசார் நேற்று பஜர் அலியை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்ததாக தெரிவித்தனர். இந்த நிலையில் வங்காளதேசம் முழுவதும் இந்து சிறுபான்மையர் மீது நடைபெறும் வன்மத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் கல்லூரி மாணவர்கள் இந்த சம்பவத்தை எதிர்த்து பேரணி நடத்தினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் கடந்த ஆண்டில் வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமராக ஷேக் ஹசீனா என்பவர் இருந்தபோது அவர் நடத்திய அரங்கத்தை எதிர்த்து மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தினர்.
இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்து புதிய அரசு பொறுப்பேற்றது. பின்பு வங்காளதேசத்தின் புதிய பிரதமராக முகமது யூசுப் என்பவர் பதவி ஏற்றார். அதன் பிறகு தான் சிறுபான்மையின மக்களுக்கு தொடர்ந்து வன்முறை அதிகரித்து வருகிறது என பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.