2026-ன் துணை முதல்வர் செல்வப் பெருந்தகை என காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டாரால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக, பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி இதனை செய்து வருவதாக பலரும் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.