
சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சசிகலா. அப்போது பேசிய அவர், “இந்த நேரத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் பின்வாங்கியது தவறுதான். அதிமுகவில் சுணக்கம் என்ற ஒன்று கிடையாது. தொண்டர்கள் எங்கேயும் செல்லவில்லை.
இங்கேயே தான் இருக்கிறார்கள். விரைவில் அதிமுகவை ஒன்றிணைத்து வருகிற 2026ம் வருடம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காட்டிய வழியில் அதிமுக தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்றார்.