தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 110 தொகுதிகளில் பாமக என்ற கட்சியே கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் விமர்சித்துள்ளார்.

மேட்டூரில் பேசிய அவர், மேட்டூர், பென்னாகரம் மற்றும் தர்மபுரி தொகுதியில் பாமக வென்றதற்கு அதிமுக தான் காரணம். தற்போது அவர்கள் நம்மிடம் இருந்து ஓடி விட்டார்கள். அதுவும் நல்லது தான். 2026 ஆம் ஆண்டில் பாமக என்ற கட்சி இல்லாத நிலை உருவாகும். அக்கட்சி காணாமல் போகும் என தெரிவித்துள்ளார்.