ஒடிசா மாநிலத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைதொடர்பு துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அடுத்த வருடம் அதாவது 2024-ம் ஆண்டு முதல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை தொடங்கப்பட இருக்கிறது.

அதன்படி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை தொடங்கப்படும். இதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வருடம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையும், அடுத்த வருடம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவையும் தொடங்கப்படும் என்று கூறினார்.