தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, திண்டிவனம், மேட்டூர், பொள்ளாச்சி, ஓசூர், நாகை, பொன்னேரி, பரமக்குடி மற்றும் செய்யாறு உள்ளிட்ட 20 இடங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு சார் ஆட்சியராக நாராயண சர்மா, திண்டுக்கல் சார் ஆட்சியராக திவான்சு நிகாம், சேலம் சார் ஆட்சியராக பொன்மணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.