
குஜராத் மாநிலத்தில் லால் சாத் பகுதியில் பெண்களுக்கான ஆடைகள் தைக்கும் தையல் கடையை நடத்தி வருபவர் முஸ்லிம் அன்சாரி. இவர் தனது மாமாவுடன் இணைந்து தொழில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் மின் கட்டணம் கடைக்கு எப்பொழுதும் 2000 ரூபாய்க்கு உள்ளே தான் வரும். இந்த மின் கட்டணத்தை யுபிஐ மூலம் கட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த மாதம் மின் கட்டணம் ரூபாய் 86 லட்சம் வந்துள்ளது. இதனைக் கண்ட கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். உடனே மின்வாரியத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை செய்ய மின்வாரிய அதிகாரி கடைக்குச் சென்று மீட்டரை சரிபார்த்தனர்.
அப்பொழுதுதான் மின் ரீடிங் அளவை மின்வாரிய ஊழியர் தவறாக எழுதியுள்ளார். அதாவது மின் அளவை எடுத்த மின்வாரிய ஊழியர் தவறாக இரண்டு பூஜ்ஜியங்கள் சேர்த்து எழுதியுள்ளார் இதனால் தான் இவ்வளவு மின் கட்டணம் வந்துள்ளது என தெரிய வந்தது. பின்பு மீட்டரில் வந்துள்ள மின் ரீடிங்கை அதிகாரிகள் சரியாக மாற்றி எழுதிக் கொடுத்தனர். தற்பொழுது அந்த கடையில் மின் கட்டணம் ரூபாய் 1540 மட்டுமே வந்திருந்தது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்திற்கு அடுத்து அன்சாரியின் தையல் கடை மிகப் பிரபலமாகி வருகிறது.