உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முகல்ராய் கோத்வாலி பகுதியில் இரு இளம்பெண்கள் வசித்து வருகிறார்கள். இந்த இரு இளம் பெண்களும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டனர். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் பெற்றோருக்கு பெண்கள் என்பதால் சந்தேகம் வரவில்லை. இந்நிலையில் இருவரும் கடந்த 6 நாட்களுக்கு முன்பாக திடீரென வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

 

 

அவர்கள் ஒரு வீட்டில் வாடகைக்கு எடுத்து தங்கி வந்த நிலையில் பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இரண்டு பெண்களையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.