
உலகில் பெரும்பாலான மக்கள் வித்தியாசமான சாதனையை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது 18 வயது நேபாள இளைஞர் கின்னஸ் சாதனை செய்துள்ளார். அதாவது குறைந்த வயதில் உலகின் மிக உயரமான 14 மலை சிகரங்களில் ஏறியவர் என்று கின்னஸ் சாதனையை 18 வயது நேபாள இளைஞரான நிமா ரிஞ்சி ஷெர்பா படைத்துள்ளார்.
இதில் தனது 16 வயதில் மலை ஏற்றத்தை தொடங்கிய ஷெர்பா கிட்டத்தட்ட 740 நாள்களில் 8,000 மீட்டருக்கு மேல் 14 சிகரங்களை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார். இவர் தனது பத்தாம் வகுப்பு உயர்நிலை பள்ளி தேர்வுகளை முடித்த சில நாட்களிலேயே அதாவது கடந்த செப்டம்பர் 30. 2022 அன்று உலகின் எட்டாவது உயரமான மனாஸ்லு மலை உச்சியை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.