கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ரஜினி நடிக்கும் ஜெயிலர், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 ஆகிய 2  படங்களையும் வரும் தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2005ம் வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி ரஜினிகாந்தின் சந்திரமுகி, கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்கள் ஒன்றாக திரைக்கு வந்தது. இதில் சந்திரமுகி படம் பெரிய வெற்றியடைந்தது. தற்போது 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரஜினி, கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக போவதாக வெளியாகியுள்ள தகவல் அவர்களது ரசிகர்களையும் குஷிப்படுத்தி இருக்கிறது.

ஜெயிலர் சூட்டிங் 70 சதவீதத்துக்கு மேல் முடிந்திருக்கிறது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதில் மோகன்லால், சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிக்கின்றனர். ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், ரகுல்பிரீத் சிங், பாபி சிம்ஹா உட்பட பலர் நடிக்கின்றனர்.