
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவனை காணவில்லை என்று மாணவனின் பெற்றோர் கடந்த ஜூன் 15ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவருக்கும் 40 வயது ஆசிரியைக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. பிறகு புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் அறை எடுத்து தங்கி இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி விரைந்த போலீசார் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியையை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த ஆசிரியருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் 17 வயது மாணவருடன் உறவில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.