
தஞ்சை பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை வன்கொடுமை செய்த அபினேஷ், அவரது நண்பர்கள் ஸ்ரீதரன், அரவிந்தன், ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியே பேச வேண்டும் என்று அழைத்து சென்று அபினேஷ் தன் நண்பர்களுடன் சேர்ந்து வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்ததை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிய ராகுல் கைது செய்யப்பட்டுள்ளார்.