நாட்டில் நிதி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்காததன் விளைவாக நீங்கள் பல மோசடிகளுக்கு ஆளாக நேரிடும். இந்தியாவில் சராசரியாக 17 சதவீதம் பேர் வங்கி தொடர்பான கடவுச்சொற்களை தங்கள் மொபைல் போனில் பாதுகாப்பாற்ற முறையில் வைத்திருப்பதாக தற்போது ஒரு கணக்கெடுப்பு அறிக்கை வெளியாகி உள்ளது. 34 சதவீத மக்கள் தங்கள் கடவுச்சொற்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். 4 சதவீதம் பேர் தங்கள் மொபைல் போனின் தொடர்பு பட்டியலில் கடவுச்சொல்லை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நான்கு சதவீதம் பேர் தங்களுடைய ரகசிய கடவுச்சொற்களை மொபைல் பாஸ்வேர்டு செயலியில் சேமித்து வைத்துள்ளனர். மேலும் நான்கு சதவீதம் பேர் தங்கள் மொபைல் சாதனங்களில் உள்ள சில செயலிகளில் கடவுச் சொற்களை வைத்திருப்பதாக கூறியுள்ளனர். ஐந்து சதவீதம் பேர் கடவுச்சொற்கள் கொண்ட குறிப்புகளை தங்கள் பர்சில் வைத்திருப்பதாக கூறியுள்ளனர். சர்வே எண் கலந்து கொண்டவர்களில் 14 சதவீதம் பேர் தங்கள் பாஸ்வேர்டுகளை எங்கும் எழுதுவதில்லை என்றும் பொதுவாக நினைவில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். பல தங்களுடைய கடவுச்சொற்களை மொபைல் எண், பிறந்த தேதி, Password, Password1234, 1234554321 என வைத்துள்ளார்கள்.