
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி காவல்துறையினர் இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது அந்தப் பகுதியாக வந்த பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் அவர்களிடம் 16 1/2 சவரன் தங்க கட்டிகள் மற்றும் அரை கிலோ வெள்ளி கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கோவில்பட்டி காவல்துறையினர் பைக்கில் வந்த 4 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
மேலும் அவ்ர்களிடம் இருந்த தங்கம் , வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்டவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகாயராஜ் (48), சென்னை பள்ளிக்கரணை சேர்ந்த சதீஷ் (37), சாத்தூர் புல்வாய்ப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துராஜா (43), சென்னை அம்பத்தூர் சேர்ந்த பொன்முருகன் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து அவர்களிடம் நடத்திய விசாரனையில், கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு சக்கரப்பாணிநகரை சேர்ந்த நல்ல சிவன் (67) என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து சுமார் 19 1/2சவரன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.