அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை ஏர்போர்ட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக 16 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது எதற்காக கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை. ஆட்சி அதிகாரம் இல்லாத போது வேண்டுமென்றே திமுக திட்டமிட்டு பழி சொல்கிறது.

திமுகவுக்கு திட்டமிட்டு பழி சொல்வதே வாடிக்கையாகிவிட்டது. தேமுதிகவுக்கும் எங்களுக்கும் இடையே சுமுகமான உறவு நீடிக்கும் நிலையில் அதனை யாராலும் உடைக்க முடியாது. அதிமுக எப்போதும் யாருக்குமே துரோகம் செய்தது கிடையாது. திமுக தான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் குற்ற செயல்களில் என்பது அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் கால்வாயை திரைசீலை வைத்து மறைத்து வைக்கும் அளவிற்கு அவலமான ஆட்சி நடைபெறுகிறது. அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் மக்களுக்காக பல நல்ல திட்டங்கள் வழங்கப்பட்டதோடு சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணிக்காக்கப்பட்டது.

ஆனால் கடந்த 4 வருட திமுக ஆட்சியில் மக்கள் விரோத ஆட்சி தான் நடைபெறுகிறது என்று கூறினார். மேலும் முன்னதாக மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஸ்டாலின் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.