குண்டும் குழியுமான சாலைகளால் உடல் வலி மற்றும் மன உளைச்சல் உண்டாவதாக கூறி 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என பெங்களூரு மாநகராட்சிக்கு ஒரு நம்பர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மோசமான நிலையில் இருக்கும் சாலைகளில் வாகனத்தை ஓட்டுவதால் கடுமையான கழுத்து மற்றும் முதுகு வலி ஏற்படுகிறது. முறையான பராமரிப்பின்றி பல சாலைகள் வாகனங்களை ஓட்டுவதற்கு தகுதியற்றவையாக உள்ளன. 15 நாட்களுக்குள் 50 லட்ச ரூபாய் இழப்பீடு தராவிட்டால் வழக்கு தொடர்வேன் என அந்த நபர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.