ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஹவுரா மற்றும் சென்னை வழித்தடத்தில் ராயகடா பயணிகள் ரயில் மற்றும் விசாகப்பட்டினம் பலாசா ரயிலும் பின்னால் இருந்து மோதியது. இதில் 14 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்தக் கோர ரயில் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விபத்து ஏற்படுத்திய ஒரு ரயிலின் டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் கிரிக்கெட் போட்டியை செல்போனில் பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் கவன சிதைவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.