
வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அடுத்த இரு தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக வலுப்பெறவும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வலுவான தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.