ஆந்திர மாநிலம் சீமா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 25 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் ஆண்களை மயக்கி பணம் பறிப்பதற்காக தன்னுடன் 3 பேரை சேர்த்துக்கொண்டு ஒரு குழுவை உருவாக்கினார். அதாவது கணவன் மனைவி கருத்து வேறுபாடு, விவாகரத்து பெற்றவர்கள், விவாகரத்து பெறுவதற்காக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பவர்கள், திருமணம் ஆகாத பணக்கார ஆண்கள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் போன்ற ஆண்களை ஆசை வலையில் வீழ்த்தி பணம் பறிப்பது தான் அவர்களின் நோக்கம்.

அதன்படி முதலில் ஆண்களிடம் நலம் விசாரிப்பது போல் அவர்களை மயக்கி ரகசியமாக தன்னுடைய குழுவினர் மூலம் திருமணம் செய்து பின்னர் அவர்களின் வீட்டிற்கு செல்லாமல் ஹோட்டலில் அறை எடுத்து உல்லாசம் அனுபவிப்பார். இதனை அந்த பெண்ணின் குழுவினர் வீடியோ எடுத்து பின்னர் அந்த வாலிபர்களிடம் மிரட்டுவார்கள். கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் இந்த வீடியோவை பரப்பி விடுவேன் அல்லது குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவேன் என்று அவர்கள் மிரட்டும் நிலையில் அவமானம் என்பதால் அவர்களும் கேட்கும் பணத்தை கொடுத்து விடுவார்கள்.

இந்த பெண் கிட்டத்தட்ட 2 வருடங்களில் இதே போன்று 12 பேரை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றி நிலையில் சம்பந்தப்பட்ட 12 பேரும் குழுவாக சேர்ந்து தற்போது போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் தாங்கள் இழந்த பணம் மற்றும் நகைகளை மீட்டு தருமாறு புகார் கொடுத்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால் அந்தப் பெண் சிலர் என் மீது பொய்யாகப் புகார் கூறுகிறார்கள். இப்படி பொய் புகார் தெரிவித்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன். என்மீது புகார் சொன்ன 12 பேரையும் நேரில் அழைத்து விசாரியுங்கள். உண்மையை கண்டறிந்து என் மீதுள்ள குற்றசாட்டை உங்களால் நிரூபிக்க முடியுமா? என்று சவால் விட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.