சபாநாயகர் அப்பாவுக்கு அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஜெயக்குமார், தயவுசெய்து அப்பாவுவுக்கு பதவி வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன். பதவி ஆசையில் அப்பாவு எதையாவது பேசிக் கொண்டிருக்கிறார். கும்பலாக இருப்பதால் திமுக கூட்டணி வலுவானது இல்லை என்றார். முன்னதாக அதிமுக எம்எல்ஏ-க்கள் 40 பேர் திமுகவில் இணைய வந்ததை ஸ்டாலின் நிராகரித்ததாக அப்பாவு பேசியிருந்தார்.