மலையாள சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய இளம் நடிகைகளில் ஒருவரான மாளவிகா ஸ்ரீநாத் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடிசன் எனும் பெயரில் தனக்கு நடைபெற்ற பாலியல் அத்துமீறல் பற்றி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இவர் நிவின்பாலி நாயகனாக நடித்த சாட்டர்டே நைட், மதுரம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரக்கூடியவர் மஞ்சு வாரியர். 40 வயதை கடந்துவிட்ட போதிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். அதன்படி தனுஷின் அசுரன் படம் வாயிலாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த மஞ்சு வாரியர், சென்ற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன துணிவு படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார்.

அண்மையில் மாளவிகா ஸ்ரீநாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது “10 நிமிடம் மட்டும் அட்ஜஸ்மெண்ட் பண்ணால் மஞ்சுவாரியரின் மகளாக நடிக்கும் வாய்ப்பை உனக்கே தருகிறேன் என்று கூறினார். உடனே நான் அழ ஆரம்பித்ததோடு அவருடைய கேமராவை தட்டிவிட முயற்சித்தேன். அதன்பின் நான் அங்கிருந்து தப்பித்து விட்டேன். தற்போது நினைச்சாலும் அது பயங்கரமான அனுபவமாக இருக்கிறது என கூறினார்.