தமிழ்நாட்டில் இன்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் 10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகள் மூலமாக மே 19ஆம் தேதி முதல் பெற்று கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மேலும் தனி தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.