தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி விண்ணப்பம் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.