திருவனந்தபுரம் பூவாச்சலில் பத்தாம் வகுப்பு மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் தூரத்து உறவினரான பிரியராஞ்ஜன் என்பவர் காரை ஏற்றி கொன்றுவிட்டு வேகமாக செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோவில் வளாகத்தில் சிறுநீர் கழித்தது குறித்து கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். குற்றவாளி தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அருண்குமார் மற்றும் தீபா தம்பதியரின் மகன் ஆதிசேகர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாலை வீட்டின் அருகே கார் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.