
திருவண்ணாமலை மாவட்டம் வீரபத்திர நகரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி உமாதேவி(25). இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய மோகனாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று மதியம் மோகனா ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அருகே இருந்த விவசாய கிணற்றில் மோகனா ஸ்ரீ தவறி விழுந்தார். இதனைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உமாதேவி தனது மகளை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார்.
ஆனால் நீச்சல் தெரியாததால் தாய் மகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உமாதேவி, மோகனா ஸ்ரீ ஆகியோரின் சடலங்களை மீட்டனர்.
பின்னர் அவர்களது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த உமாதேவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.