
பெங்களூர் வித்யாரண்யபுரா என்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் அருகிலுள்ள வீட்டுக்குள் குதித்து அங்கிருந்த ஷூக்கள் மற்றும் 2 சிலிண்டரை திருடி சென்றனர். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் காவல்துறையினரிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வீட்டின் அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை பார்வையிட்டனர்.
அதில் 2 மர்ம நபர்கள் ஆட்டோவில் வந்து திருடி சென்றது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் அந்த ஆட்டோவின் விவரங்களை வைத்து அந்த மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்களது வீட்டிற்க்கு சென்று காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பிராண்டட் ஷூக்கள் பல இருந்தது. மொத்தம் அதில் 715 ஷூக்கள் இருந்தது. அதனின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும் .
இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் விலை உயர்ந்த ஷூக்களை திருடி அதனை பல்வேறு இடங்களில் விற்பனை செய்ததாக கூறினர். மேலும் அவர்களை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்பு அவர்களை சிறையில் அடைத்தனர்.