தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் விரைவு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு உணவகங்களில் தனி அறையில் உணவு வழங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் உணவகங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது  குறித்து வெளியான அறிக்கையில், நீண்ட தூரம் பயணிக்கும் அரசு விரைவு பேருந்துகள் இடையில் உள்ள உணவகங்களில் நின்று செல்லும். அப்போது பயணிகளுக்கு உணவு வழங்கும் அறையிலேயே தான்  ஓட்டுநர், நடத்துநருக்கும் உணவு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.