தமிழகத்தில் ஆதித்யாராம், அசோகா நந்தவனம், அம்பாலால், ரேடியன்ஸ் ரியாலிட்டி உள்ளிட்ட 4 கட்டுமான நிறுவனங்களில் கடந்த 14-ம் தேதி சோதனை தொடங்கப்பட்டது. வரி ஏய்ப்பு புகாரின்படி வருமானவரித் துறையினர் நடத்தும் இந்த சோதனையானது 3வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. வருமான வரித் துறையினரின் இந்த சோதனையில் 7.5 கிலோ தங்கம் சிக்கியுள்ளதாக தகவல் புகாரின் அடிப்படையில் கூறப்படுகிறது.

தொடர்ந்து 3-வது நாளாக நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையில், குடியாத்தத்தில் அம்பாலால் குழும நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் இருந்து 7.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சோதனையில் சில ஆவணங்களும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.