கேரளா மாநிலம், கோழிக்கோடு அருகேயுள்ள ஓமசேரி முதூர் சாலையில், இருசக்கர வாகனத்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவர் விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஹெல்மெட் அணியாமல் சாலையில் குறுக்கே கடக்க முயன்ற அந்த மாணவி மீது, வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் மாணவி நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தாலும், அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து நடந்த இடம் மற்றும் நேரம் ஆகியவை பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதன் அவசியத்தையும், சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்துகிறது.

“>