
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோக்களில் பாம்புகள் பற்றிய வீடியோ என்றால் சொல்லவே வேண்டாம் மிகவும் வைரலாகிவிடும். அதாவது பாம்புகளுடன் வித்தைக்காட்டி பலரும் சமூக வலைதளத்தில் ஹீரோவாக வேண்டும் என முயற்சித்து கடைசியில் உயிருக்கே ஆபத்தை விளைவித்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் மிகப்பெரிய மலைப்பாம்பை எடுத்து அதற்கு வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுக்க முயற்சி செய்கிறார்.
அவர் ஒருமுறை முயற்சி செய்தபோதே அந்த பாம்பு அவரின் வாயை பலமாக பிடித்து கடித்து விட்டது. அவர் எடுத்த நிலையில் பின்னர் அந்த பாம்பு அவரது கன்னத்தை கடித்து வைத்து விடவே இல்லை. அவர் நீண்ட நேரம் ஆக போராடி எப்படியோ அந்த பாம்பை விடாப்படியாக இழுத்து தப்பித்தார். அதோடு அந்த வீடியோ முடிவடையும் நிலையில் அவருக்கு என்ன ஆனது என்ற விவரம் தெரியவில்லை.
மேலும் இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள புகழுக்காக இளைஞர்கள் பலரும் இப்படி ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு கடைசியில் உயிரையே இழக்கும் அளவுக்கு சென்று விடுவது மிகவும் வேதனையாக மாறியுள்ள நிலையில் இது போன்ற முயற்சிகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
— ExpiredEntity (@TheDailyCuts) June 9, 2025