
கடலூர் அருகே அரசு மருத்துவமனை மொட்டை மாடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு சிகிச்சைக்காக வந்தபோது மக்கள் மருத்துவமனை வளாகத்தில் துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மருத்துவமனை வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்ட போது மொட்டை மாடியில் 50 வயதுடைய ஆண் சடலம் அழுகிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.