ஐசிசி டி20 உலக கோப்பை போட்டிகள் ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்குபெறும் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு வருகின்ற 27ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்‌ உலகக்கோப்பை போட்டியில் சஞ்சு சாம்சன் கண்டிப்பாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதோடு ரோகித் சர்மாவுக்கு பிறகு கேப்டனாக சஞ்சு சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்‌. மேலும் மும்பை அணியின் கேப்டனாக ஐபிஎல் போட்டியில் தற்போது விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் அவர் டி20 உலக கோப்பை போட்டியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.