செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற புது மாப்பிள்ளை சாய்(28) நிலைதடுமாறி தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் இடையே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹனிமூனுக்காக கோவாவிற்கு செல்ல திட்டமிட்ட சாய் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக சென்றபோது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அவர் உயிரிழந்தது தெரியாமலேயே அவரது மனைவி மாதுரியும்(23) பிற நண்பர்களும் கசேக்குடா வரை பயணம் செய்துள்ளனர்.

போலீசார் தகவல் தெரிவித்த பின்பு தான் சாய் ரயிலில் ஏறாது அவர்களுக்கு தெரிய வந்தது. சாயின் உடலை போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஹனிமூனுக்கு சென்ற புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.