
நாட்டையே உலுக்கிய உலுக்கிய ஹனிமூனில் வைத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது மனைவி சோனம் உள்ளிட்ட ஐந்து பேரும், விரைவில் மேகாலயாவின் ஷில்லாங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்நிலையில், சோனத்தின் சகோதரர் கோவிந்த் திடீரென ராஜாவின் வீட்டுக்கு சென்று அவரது தாயார் மற்றும் குடும்பத்தினரை சந்தித்தார். அவர் ராஜாவின் தாயாரை கட்டிப்பிடித்து அழுதார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கோவிந்த், “இந்த கொலையில் சோனத்தின் பங்கு இருப்பது 100% உறுதி. ராஜ் குஷ்வாஹாவுடன் தொடர்புடையவர்களே இந்த கொலையில் ஈடுபட்டுள்ளனர்,” என்று கூறினார்.
மேலும், கோவிந்த் தெரிவித்ததாவது, “நாங்கள் சோனத்துடன் உள்ள உறவை முறித்துவிட்டோம். இந்தக் குடும்பம் ஒரு நல்ல மகனை இழந்துள்ளது. சோனத்தால் இவ்வளவு பெரிய ஒரு துயரத்தை இந்தக் குடும்பம் அனுபவிக்க வேண்டியுள்ளது. நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுள்ளேன். சோனம் குற்றவாளி என்றால், அவளை தூக்கிலிடவேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.
அதன் பிறகு தன்னுடைய காதலனான ராஜ் குஷ்வாஹா என்ற நபருக்கு சோனம் கடந்த மூன்று ஆண்டுகளாக ராக்கி கட்டி வந்ததாகவும், அவரை ‘தீதி’ (அக்கா) என்று அழைத்துக்கொண்டிருந்ததாகவும் கோவிந்த் கூறியதுடன், அந்த உறவுக்குப் பின்னால் இருந்த உண்மைகள் தற்போது வெளிக்கொணரப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலை வழக்கில் சோனம் உள்ளிட்ட ஐந்து பேரும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில், இந்த வழக்கு மேலும் பரபரப்பாகி வருகிறது.