பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் திட்டும் போது மாணவர்கள் அமைதியாக இருப்பதோ அல்லது அழுதுகொண்டு மன்னிப்பு கேட்பதோ தான் வழக்கம்; ஆனால், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், வகுப்பறையில் ஆசிரியர் தன்னைத் திட்டியதற்காக வினோதமான முறையில் ஆக்ரோஷமாகப் பழிவாங்கத் துடித்த விடியோ தற்போது சோசியல் மீடியாவில்  செம வைரலாகி நெட்டிசன்களைச் சிரிக்க வைத்துள்ளது.

அந்தச் சிறுவன் ஆசிரியர் திட்டிய உடனே துளியும் பயப்படாமல், நேராகத் தனது பள்ளி முதல்வரை நோக்கி, “பிரின்சிபால் ஜி, உங்களுடைய நாட்களை எண்ணத் தொடங்குங்கள்; உங்கள் பள்ளியையே நான் மொத்தமாக அழித்துவிடுவேன்!” என்று சினிமா வில்லன் பாணியில் மிகக் கெத்தாக மிரட்டல் விடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Bharatinlast8hr🇮🇳 (@bharatinlast8hr)

சிறுவனின் இந்த திடீர் அதிரடிப் பேச்சைக் கேட்டு ஒரு நிமிடம் வகுப்பறையே ஸ்தம்பித்தாலும், அவனது மழலை கலந்த மிரட்டல் தொனியைப் பார்த்து அங்கிருந்த ஆசிரியர்களும், சக மாணவர்களும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிவிட்டனர்.

சோசியல் மீடியாவில் @etimes பக்கத்தில் பகிரப்பட்டு காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்தக் காலத்துக் குழந்தைகளுக்குக் கோபம் வந்தால் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாமல் இப்படித் தியேட்டர் ஹீரோ ரேஞ்சுக்குப் பேசுகிறார்கள்” என்றும், “பள்ளியின் பாதுகாப்பை உடனே பலப்படுத்துங்கள், மெயின் கேரக்டர் வார்னிங் கொடுத்துவிட்டார்” என்றும் கமெண்ட்டுகளில் நகைச்சுவையாகக் கலாய்த்துத் தள்ளி வருகின்றனர்.

சிறுவர்கள் தங்களுக்கு ஏற்படும் சின்னச் சின்ன அவமானங்களை உலக மகாப் பிரச்சினையாக நினைத்து இப்படிச் செய்யும் சுட்டித்தனங்கள், பெரியவர்களுக்குத் தங்களது சொந்த சிறுவயது ஞாபகங்களை நினைவூட்டி, இணையத்தில் ஒரு நிம்மதியான சிரிப்பலையை உருவாக்கியுள்ளது.