தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த 2 திரைப்படங்களின் ரிலீஸை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் மோதல் பல்வேறு இடங்களில் இருப்பதோடு தியேட்டர்களிலும் கலவரங்கள் நடப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் விதிமுறைகளை மீறி பேனர் வைத்ததாக கூறி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அண்ணா சாலை மற்றும் மறைமலை அடிகள் சாலை உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். மேலும் இதன் காரணமாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்களும் மீது பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.