தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் இளைஞர்கள் ஜவுளி, ஆயத்த ஆடைகள் விற்பனை, எலக்ட்ரிக்கல் கடை மற்றும் ஸ்டேஷனரி கடை போன்ற பல தொழில்களை தொடங்குவதற்கு அரசு சார்பில் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும் நிலையில் அதிகபட்ச 3.75 லட்சம் ரூபாய் வரை அரசு மானியம் கிடைக்கும்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், படித்த வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்காக கடன் வழங்கப்படுகின்றது. இதில் தொழில் செய்ய ஆர்வம் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp  என்ற இணையதள முகவரியில் UYEGP  விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது