சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையத்தில் நிர்மலா என்பவர் தொலைபேசி எண்ணப்பக கண்காணிப்பாளராக வேலை பார்த்திருந்தார். இவர் உள்நாட்டு முனைய பகுதியில் இருக்கும் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுள்ளார். நேற்று காலை மற்றொரு பெண் அதிகாரி சென்று பார்த்த போது நிர்மலா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிர்மலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மன அழுத்தத்தில் இருந்ததால் நிர்மலா தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் நிர்மலா பணி ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.