தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோன்று கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சூறைக்காற்று மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செல்போன் டவர் பாதிக்கப்பட்டுள்ளதால் சிக்னல் கிடைக்காமல் பலரும் சிரமப்படுவதால் மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அனைத்து செல்போன் நிறுவனங்களும் ‌Intra circle Romaing வசதியை செயல்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ‌Romaning-ஐ ஆன் செய்தாலே சிக்னல் இல்லாமல் செல்போன் பேசலாம். மேலும் இந்த உத்தரவு பலருக்கும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.