ஆந்திர மாநிலத்தில் உள்ள மயிலாபுரம் பகுதியில் ராஜா சங்கர்-சந்திரிகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லட்சுமி ஹிரண்யா என்ற 9 வயது மகளும், லீலா சாயி என்ற 7 வயது மகளும் இருக்கிறார்கள். இதில் சந்திரிகா பக்ரைனில் வேலை பார்க்கும் நிலையில் அங்கிருந்து அனுப்பும் பணத்தை வைத்துதான் ராஜா தன்னுடைய குழந்தைகளுடன் இங்கு வசித்து வந்தார்.

இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் தன் மனைவியின் மீது ராஜாவுக்கு சந்தேகம் வந்ததால் அடிக்கடி செல்போனில் அவர் தன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர் தன்னுடைய இரு குழந்தைகளையும் கொலை செய்ய முடிவு செய்தார். இதன்படி சம்பவநாளில் குழந்தைகள் இருவருக்கும் அவர் உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்த நிலையில் அதனை குழந்தைகள் சாப்பிட மறுத்துவிட்டது.

இதன் காரணமாக தூங்கும்போது மகளை தலையணையை வைத்து அமுக்கி அவர் துடிக்க துடிக்க கொலை செய்த நிலையில் பின்னர் மகனின் கழுத்தில் சேலையை கட்டி தூக்கில் தொங்க விட்டார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி கடிதம் எழுதி வைத்து அவர் வீட்டை பூட்டிவிட்டு ஓடிவிட்ட நிலையில் இரண்டு நாட்களாக வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டது. பின்னர் தலைமறைவாக இருந்த அந்த நபர் தன்னுடைய நண்பர் ஒருவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டதால் அவர் போலீசுக்கு தகவல் கொடுக்கவே அவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.