கிரெடிட் கார்டை பயன்படுத்தி 7 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மூலவரிபிடித்தம் செய்யப்படாது என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. அனைத்து கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளையும் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து 20% டிசிஎஸ் விதிக்கும் முடிவை அடுத்து இந்த தொடர்பு அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அந்த முடிவு மாற்றப்பட்டது. வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் வெளிநாட்டில் ஒரு நிதியாண்டில் 7 லட்சத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு 20% டி சி எஸ் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.