
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் திருமணமான 30 வயது இளம்பெண்ணை 24 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்வதாக உறுதியளித்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலமாக அனுஜித் என்ற 24 வயது இளைஞரும் அந்த இளம் பெண்ணும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரில் பல மாதங்களாக இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். தனக்கு திருமணமான விஷயத்தை மறைத்து வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய கணவருக்கு அந்த இளம் பெண் குறுஞ்செய்தி அனுப்பியது அனுஜித்துக்கு தெரியவந்துள்ளது.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அனிஜித் அந்த பெண்ணின் கணவரிடம் தெரிவித்த நிலையில் கணவர் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி இளைஞர் பல மாதங்களாக பலாத்காரம் செய்ததாக அந்த இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.