கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக அரசைச் சாடி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் மிகக் காரசாரமாகப் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை நூறு விழுக்காடு உறுதி செய்ய வேண்டிய இந்த அரசு, இத்தகைய கொடூரமான சம்பவங்களைத் தடுக்கத் தவறியது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் வேதனைக்குரிய விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும்…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 23, 2026
மேலும், இந்த அராஜகத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் மிகக் கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த அரசு வெறும் ‘ரீல்ஸ்’ அரசாக விளம்பரம் தேடிக் கொள்ளாமல், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் ‘ரியல்’ அரசாகச் செயல்பட வேண்டும் என்றும் மிக அதிரடியாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
