
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் தாதிசி- ரமாதேவி தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த நிலையில் தாதிசி வீட்டை விற்க முடிவு செய்தார். ஆனால் ரமாதேவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த தாதிசி தனது மனைவியை 11 முறை இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் ரமாதேவியின் மகள் ராக்கி தனது தந்தையும் சகோதரரும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். எனது தாயின் மரணத்திற்கு எனது சகோதரரும், அவரது மனைவியும் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.