தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் ஏமாற்றத்தில் இருந்த பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி வெளியாகி உள்ளது.

அதாவது கடந்த இரண்டு நாட்களாக சத்தமே இல்லாமல் பல பெண்களுக்கு தபால் துறை மூலம் மணி ஆர்டரில் வீடு தேடிச் சென்று போஸ்ட்மேன்கள் ஆயிரம் ரூபாயை கொடுத்து வருகிறார்கள். மகளிர் உரிமைத்தொகைக்காக கொடுத்த வங்கி மற்றும் ஆதார் விவரங்களில் தவறு ஏதாவது இருந்தால் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்த முடியாததால் மாற்று ஏற்பாடாக மணியார்ட்டரில் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.