கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் ஜிதின் (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய அரசின் கணக்காளர் அலுவலகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதின் வேலைக்காக திருவனந்தபுரத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவர் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளர்ப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கலால் துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு கஞ்சா செடி இருப்பது தெரியவந்த நிலையில், ஜிதினிடம் விசாரணை நடத்தியதில் அவர் அதனை ஒப்புக்கொண்டார். அதோடு அலங்காரத்திற்காக அந்த செடியை வளர்த்ததாகவும் கூறினார். இது பற்றி அவருடன் தங்கி இருந்த 2 அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இதைத் தொடர்ந்து ஜிதினை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது