கரூர் மாவட்டத்தில் சரஸ்வதி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குளித்தலையில் தன் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இவருடைய வீட்டின் அருகே டவர் ஒன்று இருக்கிறது. இந்த டவரை சுற்றி இரும்பு வேலி  அமைக்கப்பட்டிருந்த நிலையில் சரஸ்வதி திடீரென அந்த இரும்பு வேலையை சம்பவ நாளில் தொட்டார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் திடீரென டவரை அகற்றுமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.