வீடு குத்தகைக்கு தருவதாக கூறி ஏமாற்றியதாக இரண்டு பேர் மீது ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரஸியா பேகம் என்பவர் புகார் அளித்துள்ளார். வீடு தேடிக் கொண்டிருந்த அவரிடம் இம்ரான் மற்றும் அக்பர் ஷெரிப் ஆகிய இருவரும் குத்தகைக்கு வீடு தருவதாக 7 லட்சத்தை வாங்கியுள்ளனர். நகையை அடகு வைத்து பணத்தை கொடுத்த மூதாட்டியை அவர்கள் இருவரும் ஏமாற்றி உள்ளனர்.

ஒரு வாரத்தில் வீடு தருவதாக கூறிய அவர்கள் தற்போது போலீசில் புகார் அளித்தால் பணத்தை திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று மிரட்டுவதாகவும் அந்த மூதாட்டி கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து யாரும் இது போன்ற நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.