மும்பை காட்கோபர் பகுதியில் பவேஷ் சேத் என்பவர் வசித்து வந்தார். இவர் பேரிங் ஷாப் ஒன்று வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில்   ஒரு பாலத்தில் நின்று கொண்டு அவர் தனது மகனுக்கு வீடியோ கால் செய்துள்ளார். அதன்பிறகு தன் தந்தையிடம் பேசிய மகன் அவர் பாலத்தில் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுதொடர்பாக அவர் கேட்டபோது தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடன் அதிகமானதால் தான் தற்கொலை செய்யப் போவதாக மகனிடம் கூறினார்.
அதன்பிறகு அடுத்த நொடியே அவர் பாலத்திலிருந்து கடலுக்குள் குதித்தார். இதனால் பதறிப்போன மகன் காவல்துறையினிடம் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்றனர். மேலும் 3 மணி நேரம் தேடுதலுக்குப் பின்பு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.